இந்திய ஆய்வியல் துறைக்குப் புதிய மாணவர் சேர்ப்பு – பிப்ரவரி 2015

UMlogo_01cமலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில புதுவாய்ப்பு கிடைத்துள்ளது. சில காலங்களாக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில் தமிழ் மொழி கற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது நாம் அறிந்த செய்தியே. இக்குறையினை நீக்கும் பொருட்டு, இந்திய ஆய்வியல் துறையினர் எடுத்த முயற்சிகளுள் ஒன்று, இரண்டாம் முறையாக கல்விப் பயில வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகும். துறையினரின் முயற்சி இப்போது இப்பொழுது வெற்றியடைந்துள்ளது. இத்துறையில் மாணவர்கள் கல்விப் பயில மற்றொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் கல்வியாண்டில் இவர்கள் இணைந்து கல்விப் பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள், 13 ஜனவரி 2015 ஆகும். விண்ணப்ப பாரத்தினை www.um.edu.my –>News and Event பகுதிக்குச் சென்று பெற்றுக்  கொள்ளலாம்.

மேலதிக விபரங்களைப் பெற தொடர்புக் கொள்ளவும்.

Head Admission & Record Section, Examination Building, University of Malaya, 50603 Kuala Lumpur, Malaysia, Tel: +603-7967 3279 / 3440 / 3441 / 3502, Fax: +603-7967 3449, Email: [email protected]

குறுகிய நாள்களே எஞ்சியிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.