இனி தமிழர்கள் அரசியல் ரீதியில் நகர்த்தவேண்டிய தருணங்கள் என்ன ?

contentwriting_1உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
WORLD TAMILAR PROTECTION  SECRETARIAT   MALAYSIA

பத்திரிக்கை செய்தி /PRESS RELEASE  FAX NO…………………………….

நிர்வாக ஆசிரியர் …………………………………………………………………அவர்களுக்கு வணக்கம். தயவு செய்து கீழ்க்காணும் செய்தியை பிரசுரித்து உதவுவதோடு நிருபர்களையும் அனுப்பி உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி, வணக்கம் வாழ்க!

”உள்ளதைசொல்கிறேன்”தமிழகத்தமிழர்களம் அறிமாவளவனுடன்   உலகததமிழர் அரசியல் கலந்துரையாடல்
இலங்கையில் தமிழர் தேசிய ஆதரவில் கிடைத்துள்ள புதிய சனாதிபதி மற்றும் புதிய பிரதமரின் வெற்றி உலகத தமிழர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.இனி உலகத் தமிழர்கள், தமிழகத்தமிழர்கள்  அரசியல் ரீதியில் நகர்த்தவேண்டிய தருணங்கள் என்ன ? யாரால் எப்படி முன் வைக்க வேண்டும்?

உலகத தமிழர் பாதுகாப்பு மலேசிய மையத்தின் புரவலர் திரு சாமுவேல் ராஜ் தலைமையில் தமிழக தமிழர் களத்தின் பொதுச்செயலாளர்  திரு அரிமாவளவனுடன் மேற்காணும்  சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.  இந்நிகழ்வு 25/1/2015 ஞாயிறு மதியம் 1.00 மணிக்கு டான் சிறி சோமா மண்டபத்தில் நடைபெறும். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இடைவெளிக்குப்பிறகு திரு அரிமாவளவன் மலேசியத் தமிழர்களை சந்திக்க உள்ளார். அனைவரும் திரண்டு வருக! மலேசியாவில் தமிழர் களம் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவை தொடக்கி வைத்துள்ள இவரின் தமிழர் அரசியல் உறவுப்பாலம் தொடர்பில் மேலும் சில பதிவுகளை கேட்டு உணரலாம்.

உலக அரங்கில் பல தமிழர் சார்பு கட்சிகள் ஒருகிணைத்த  தமிழர் தேசியம் உருவாக்கத்தில் முக்கியம் அதன் இலக்குகள் பற்றியும் இக்கலந்துரையாடல் இருக்கும். தமிழர் களம் மலேசியா ,நாம் தமிழர் மலேசியா உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா போன்ற அமைப்புகளுடன் இணைத்து தமிழர்களின் அடுத்தக்கட்ட நகர்வை முன் வைத்து இந்த நிகழ்வு நடைபெறும். ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளை காத்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற  அரைகூவல் இன்று ஒரு வழியை காட்டியுள்ள வேளையில்  மலேசியத் தமிழர்களின் பங்களிப்பும் அவசியம் என கருதுகிறோம். இலங்கையின் வட மாநில தமிழ் மக்கள் குறிப்பாக தமிழீழ தமிழர்கள் தமிழா தேசிய கூட்டமைப்புக்கு முழு ஆதரவு தந்து மாநில முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழனின மூத்த அரசியல் வாதி சம்பந்தன் போன்றோரின் அரசியல் முடிவுகளை  வரவேற்கும் நாம் இழந்ததை மீட்க நல்லதுக்கு இணைவோம்.

நாட்டில் இருக்கும் அணைத்து தமிழனின ஆதரவாளர்கள் இயக்கப்பொறுப்பாளர்கள் கலந்து சிறபிக்க அன்புடன் அழைக்கிறோம். முன் பதிவு அவசியம் என்பதால் 016 6944223  என்ற பொன் ரங்கன் எண்ணில் குறுஞ்செய்தி வழி பதிவு செய்துககொள்ள விழைகிறோம்.

WITH  THANKS AND WARMEST GREETINGS FROM : M.A. PON RANGAN, PJK . 016-6944223/ DATED 21/1/2015