நாட்கள் வெகு தூரமில்லை

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

karupilaiஅரசியல் ஆசை கொண்டு
ஆயுதங்களை வீசிவிட்டு – எமை
அழித்தொழித்தவன் கூண்டில்
ஆட்டமும் பாட்டமும்……………..!

புனித மண்ணில் நின்று
சத்தியம் செய்தவன்
புண்ணியம் தேடுகிறானாம்
ஊர் ஊராகப் போய்………………..!

பதவியில் நிறுத்தி
பல்லாக்கில் உலாவ விட
செல்வாக்கு கேட்டானாம்
சிங்களவனிடம்…………………….!

ஆசையின் மோகத்தால்
பவித்திர பூமியை
அசுத்தமாய் மாற்றிய துஷ்டர்கள்……………………..!

எங்கள் முன்னின்று பேசுகின்றான்
நாங்கள் ஏமாளிகளென்று…

தக்கதருணம் வந்திருக்கு
தலைதெறிக்க போகிறது எட்டப்பன் கூட்டணிக்கும்
துரோகிகளுக்கும்.

-மூடிகள் புலனாய்வின் முகவரிகள்
தமிழீழம்.

TAGS: