அன்வார்: மே 13 எச்சரிக்கை ஹாடியின் தனிப்பட்ட கருத்து

 

anwarhadiஉள்ளூர் மன்றங்களுக்கான தேர்தல் இன்னொரு மே 13 இனக் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள எச்சரிக்கை அவரது “தனிப்பட்ட கருத்து” ஆகும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

உள்ளூர் மன்ற தேர்தலுக்கான அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பக்கத்தான் ரக்யாட் முறையாக விவாதிக்க வேண்டும் என்றாரவர்.

இது நாளை நடைபெறவிருக்கும் பக்கத்தான் தலைமைத்துவ கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

“அவர் (ஹாடி) வெளியிட்டிருந்த அறிக்கை அவரது தனிப்பட்ட கருத்து ஆகும்”, என்று அன்வார் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.