“உக்ரைன் பிரிவினைவாத ஆதரவை ரஷியா நிறுத்த வேண்டும்’

ukraine_russiaஉக்ரைன் பிரிவினைவாதிகளுக்குத் தரும் ஆதரவை ரஷியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சுவிஸர்லாந்தின் ஜூரிக் நகரில் சனிக்கிழமை ஜான் கெர்ரி கூறியதாவது: உக்ரைனைப் பிரிக்கும் திட்டத்துடன் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ஆதரவை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும். உக்ரைன் சர்வதேச எல்லையை மூட வேண்டும். கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக அளித்து வரும் ஆயுதங்களையும், போர் வீரர்களையும், பொருளாதார ஆதரவுகளையும் ரஷியா திரும்பப் பெற வேண்டும் என்று ஜான் கெர்ரி கூறினார்.

கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாள்களாக சண்டை தீவிரமடைந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலின் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த குண்டு வீச்சில் 30 பேர் கொல்லப்பட்டதையடுத்து, ஜான் கெர்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com