அஸ்மின்: பாஸ்- டிஏபி சில்லறை சண்டை ஓய வேண்டும்

azபிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின் அலி,  ஊராட்சித்  தேர்தல்மீது  டிஏபியும்  பாஸும்  சர்ச்சையிடுவதற்கு  விரைவில்  தீர்வு  காண  வேண்டும்  என  விரும்புகிறார்.

“இதற்கு  பக்கத்தானுக்குள்ளேயே  தீர்வு  காண  வேண்டும். பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றக்  கூட்டம்  கூட்டப்படும்போது  இவ்விவகாரமும்  விவாதிக்கப்படுவது  நிச்சயம்.

“பக்கத்தான்  ரக்யாட்டின்  பலமே  ஒரு கருத்துடனும்  ஒருமித்த  முடிவுடனும்  முன்னோக்கிச்  செல்வதே.  தனிப்பட்ட  கருத்துகளுக்க்கு  அங்கே  இடமில்லை”, என  சிலாங்கூர்  மந்திரி  புசாருமான  அஸ்மின்  கூறினார்.