ஏர் ஏசியா X-இன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) அஸ்ரான் ஒஸ்மான் ரனி, பதவிவிலகல் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறும் செய்திகளை மறுக்கிறார்.
“நான் பதவி விலகவில்லை. அந்த விமான நிறுவனத்தை நான்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இச்செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றாரவர்.
கினிபிஸ்- உக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “நான் பதவி விலகியிருந்தால் பங்குச் சந்தை அறிவித்திருக்குமே. அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லையே, சரியா?”, என்றவர் வினவினார்.
டாவோஸில் உள்ள ஏர் ஏசியா நிறுவனர் டோனி பெர்னாண்டசிடம் தகவல் அறியலாம் என்றால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கூட்டு-உரிமையாளர் கமருடின் மெரானுனை அழைத்துப் பார்த்ததில் பதில் இல்லை.
இதனிடையே, ஏர் ஏசியா X வட்டாரங்கள் அஸ்ரான் வெளியேறுவது உறுதி என்கிறார்கள். நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என ஏர் ஏசியா X-இன் உரிமையாளர்கள் விரும்புகிறார்களாம்.
செய்தியின் உண்மை தெரியவில்லை. ஒரு நிறுவனத்திற்கு இழப்பு என்றால் சம்பந்தப்பட்டவர் தூக்கி எறிவது என்பது நடைமுறை. அம்னோ தரப்பு எதிர்க்கும் என்றால் அதற்கான நஷ்டத்தை அம்னோ ஏற்க வேண்டும். தொழில் என்று வரும்போது பூமிபுத்ராவாவது, புண்ணாக்காவது!
ஏர் ஏசியா நிறுவனர் டோனி பெர்னாண்டசிடம் தகவல் அறியலாம் என்றால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கூட்டு-உரிமையாளர் கமருடின் மெரானுனை அழைத்துப் பார்த்ததில் பதில் இல்லை –
இதுல என்ன வியப்பு இருக்கு? நம்ம பிர___ரக் கூடத்தான் எங்கே தேடறதுன்னு தெரியலே. காலையிலே கோலாலம்பூர்ல நாசி லெமா சாப்பிட்டுட்டு 10 மணிக்கு ‘காபி வித் ஒபாமா’..மதிய சப்பாடு புது டில்லி மாலை நாலு மணி ‘டீ டைம்’ ஆஸ்திரேலியாவிலே..இரவு சாப்பாடு ஜகார்த்தா..இடை இடையே பாத்ரூம் போறது தோக்கியோவிலே..ஆனா இவர் மலேசியாவுக்கு பி…..ர்..தேவுடா தேவுடா