ஏர் ஏசியா X சிஇஓ: நான் பதவி விலகவில்லை

air xஏர் ஏசியா X-இன் தலைமை  செயல்  அதிகாரி(சிஇஓ) அஸ்ரான்  ஒஸ்மான்  ரனி,   பதவிவிலகல்  கடிதம்  கொடுத்திருப்பதாகக்  கூறும்  செய்திகளை  மறுக்கிறார்.

“நான்  பதவி  விலகவில்லை. அந்த  விமான  நிறுவனத்தை  நான்தான் நடத்திக்  கொண்டிருக்கிறேன். இச்செய்திகள்  எங்கிருந்து  வருகின்றன  என்பது  எனக்குத்  தெரியவில்லை”, என்றாரவர்.

கினிபிஸ்- உக்கு  அனுப்பிய  மின்னஞ்சலில், “நான்  பதவி   விலகியிருந்தால்  பங்குச்  சந்தை அறிவித்திருக்குமே. அப்படி  எந்த  அறிவிப்பும்  வரவில்லையே, சரியா?”, என்றவர்  வினவினார்.

டாவோஸில்  உள்ள  ஏர் ஏசியா  நிறுவனர்  டோனி  பெர்னாண்டசிடம்  தகவல்  அறியலாம்  என்றால்  அவரைத்  தொடர்புகொள்ள  முடியவில்லை. கூட்டு-உரிமையாளர் கமருடின் மெரானுனை  அழைத்துப் பார்த்ததில்  பதில்  இல்லை.

இதனிடையே,  ஏர் ஏசியா X  வட்டாரங்கள்  அஸ்ரான்  வெளியேறுவது  உறுதி  என்கிறார்கள். நிறுவனத்துக்கு  ஏற்பட்ட  இழப்புக்கு  அவரே  பொறுப்பேற்க  வேண்டும்  என   ஏர் ஏசியா X-இன்  உரிமையாளர்கள்  விரும்புகிறார்களாம்.