சிருல் ‘காட்டிக்கொடுக்கப்பட்டாராம்’

piahபோலீஸ்  அதிகாரியாக  தன்  கடமையைச்  செய்ததற்காக  சிருல்  அஸ்ஹார்  உமர் “காட்டிக்கொடுக்கப்பட்டார்”  என  அவரின்  தாயார்  பியா  சமட்  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்டான்துன்யா  கொலையில்  மரண தண்டனை  விதிக்கப்பட்டிருந்தாலும்  சிருல்  விடுவிக்கப்படுவார்  என்று அவரது  குடும்பம்  நம்புகிறது. பியா,74, இதைத் தெரிவித்ததாக  பாஸ் கட்சி  செய்தித்தாளான  ஹராகா டெய்லி  கூறிற்று.

“என்  வருத்தத்தை  அந்த  ஆண்டவனே  அறிவார், சிருல்  பாதுகாப்பாக  இருக்க  வேண்டும்  என்று  வேண்டிக்கொள்ள  மட்டுமே  என்னால்  முடியும்”. பாஸ்  தலைவர்கள்  பலர்  இன்று தைப்பிங்கில்  உள்ள  சிருலின்  வீட்டுக்குச்  சென்றபோது  அவரின்  தாயார்  இவ்வாறு  கூறியதாக  அச்செய்தித்தாள்  தெரிவித்தது.

அல்டான்துன்யா  கொலை  வழக்கில்  தீர்ப்பளிக்கப்பட்டபோது  சிருல்  நீதிமன்றம்  வரவில்லை. அவர்  இப்போது  ஆஸ்திரேலியாவில்  உள்ளார்.