இலங்கை அகதிகள் மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் உதவி

tamilnadu_refugees_001தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் உதவவுள்ளன.

இதனை இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்,ஐக்கிய நாடுகளின் அகதிகள் சபையின் பிரதிநிதி குலாம் அபாஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் லிபூஸ் சௌக்பூவா ஆகியோரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வடக்கு கிழக்கில் 23ஆயிரம் வீடுகளை அமைத்துள்ளது. அத்துடன் 14 மில்லியன் யூரோக்களையும் இந்ததிட்டத்துக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: