குருப்-புக்கு எதிராக பெர்காசா அவதூறு வழக்கு

suitமலாய்  உரிமைகளுக்குப்  போராடும் என்ஜிஓ-வான  பெர்காசா, தன்னை  “இனவாத, குறுகிய நோக்குடைய”  அமைப்பு  என  வருணித்துள்ள  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப்-புக்கு  எதிராக  அவதூறு  வழக்கு  பதிவு  செய்துள்ளது.

குருப், நேற்று, பெட்டாலிங்  ஜெயா, சன்வேயில்  குருப்  அவ்வாறு  கூறினார்  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

குருப்  பயன்படுத்திய  அச்சொற்களில்  பெர்காசா  ஒரு  தீவிரவாத  அமைப்பு  என்பதால்  அதனால்  வன்முறைகள்  ஏற்படலாம் என்ற உள்ளார்ந்த அர்த்தம்  பொதிந்திருக்கிறது.

இச்சொற்களை  அமைச்சர்  மீண்டும்  சொல்லத்  தடையாணை விதிக்கப்பட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டிருக்கும்  பெர்காசா, ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக  இழப்பீடு  வழங்குமாறும்  கோரிக்கை  விடுத்துள்ளது.