டிங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது: அமைச்சர் எச்சரிக்கை

dengue2014-உடன் ஒப்பிடும்போது  2015-இன்  முதல்  மூன்று  வாரங்களில்  டிங்கிக்  காய்ச்சல்  கண்டவர்  எண்ணிக்கை  65 விழுக்காடு  கூடியிருக்கிறது.

இக்காலத்தில் 8,502 பேருக்கு  டிங்கிக்  காய்ச்சல்  கண்டதாகவும்  20பேர்  அந்நோயால்  இறந்தார்கள்  எனவும்  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார்.

2014-இன்  முதல்  மூன்று  வாரங்களில்  எழுவர்  மட்டுமே  அந்நோயால்  இறந்தார்கள் என்பதையும்  அவர்  குறிப்பிட்டார்.

டிங்கி  நோய்  பெரும்பகுதி -80 விழுக்காடு- வீடுகளிலிருந்துதான்   பரவுகிறது  என்பதால்  வீட்டில்  இருப்போரும்  சில  தடுப்பு  நடவடிக்கைகளை  மேற்கொள்வது  அவசியம்  என  சுப்ரமணியம்  தெரிவித்தார்.

“வீடுகளில்  பாதுகாப்புக்காகக்  காலை 6-இலிருந்து  8.30 வரையிலும்  மாலை 6 மணியிலிருந்து  இரவு 8.30 வரையிலும்  பூச்சிக்கொல்லி  மருந்துகளை  அடித்து  வையுங்கள்”, என்றாரவர்.