எம்எச்370 மீதான அறிவிப்பு இரத்தானது

mh370பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  மீதான   முக்கிய  அறிவிப்பு  கடைசி  நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.

அந்த  அறிவிப்பைச்  செய்வதற்காக  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  புத்ரா  ஜெயாவில்  உள்ள  அதன்  தலைமையகத்தில்  இன்று  பிற்பகல்  மணி  3.30-க்கு    செய்தியாளர்  கூட்டத்தை  நடத்தவிருந்தது. ஆனால், அது  “எதிர்பாராத  காரணங்களால்”  இரத்துச்  செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்எச்370  கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 239  ஆள்களுடன்  கோலாலும்பூரிலிருந்து  பெய்ஜிங்  நோக்கிப்  பறந்து  கொண்டிருந்தபோது  காணாமல்  போனது.

அது  என்னவானது  என்பது  இதுவரை தெரியவில்லை.