மஇகா தகராற்றில் பிரதமர் நடுவராகிறார்

 

micpmmediatorஇப்போதிலிருந்து பிரதமர் நஜிப் ரசாக் மஇகா தகராற்றில் நடுவராக செயல்படுவார் என்பதை அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மஇகாவின் தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரை நடுவராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று காலையில் தம்மை அழைத்து ஆலோசனை கூறியதாக சுப்ரமணியம் கூறினார்.

இன்று காலையில் கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலும் தகராற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடையே ஒரு சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்.

“இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு நடுவராக பணியாற்ற விரும்பும் பிரதமரின் நல்ல நோக்கத்தை நாங்கள் மதிக்கிறோம்”, என்று டாக்டர் சுப்ரமணியம் மேலும் கூறினார்.