ராமலிங்கனார் நினைவு நாள்: இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

vallalarவடலூர் ராமலிங்கனார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளை பிப்ரவரி. 3-ஆம் தேதி மூடவேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: வடலூர் ராமலிங்கனார் நினைவு நாள் பிப்ரவரி. 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் சென்னையில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யும் கடைகளைக் கட்டாயம் மூடவேண்டும்.

மேலும் வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் விற்கக் கூடாது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: