அன்வார்: நான் சிறை சென்றாலும் பக்கத்தான் இருக்கும்

anwarஎதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பில்  தாம்  தண்டனை  பெற்று  சிறை  சென்றால்  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்துவிடும்  என்ற கவலை  யாருக்கும்  வேண்டாம்  என்கிறார்.

டிஏபி கட்சிப் பத்திரிகையான  ராக்கெட்டுக்கு  வழங்கிய  நேரகாணலில்  அன்வார்  இவ்வாறு  கூறினார்.

“யாரும்  சிறை  செல்ல விரும்புவதில்லை. எனக்கும் சிறைசெல்ல  விருப்பமில்லைதான்……….பலரும்  அன்வார்  உள்ளே  இருந்தால்தான்  பிரச்னை என்கிறார்கள். அன்வார்  வெளியில்  இருந்தாலும் பிரச்னைதான்.

“நான்  சிறையில்  இருந்தபோதுதான்  பக்கத்தான்  உருவானது  என்பதை  மறந்து  விடுகிறார்கள். பக்கத்தான்  ரக்யாட்  என்ற பெயர்  இல்லையே  தவிர  கூட்டணி  என்ற கோட்பாடு  உருவாகி  விட்டது”, என  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியுமான  அன்வார்  கூறினார்.

“நான்  சிறை  செல்வது  பக்கத்தானுக்கு  வலுவூட்டும்  என்றுகூட  சிலர்  சொல்கிறார்கள். அது  எழுச்சியூட்டுமாம். அதனால், அதைச்  சாதகமான  ஒன்றாகத்தான்  நினைக்கிறேன்”, என்றாரவர்.