துப்பாக்கியும் துணை அமைச்சரும்

gunஇளைஞர், விளையாட்டு துணை  அமைச்சர்  எம்.சரவணன்  இடுப்பில்  துப்பாக்கி  செருகியிருக்கும்  படம்  முகநூலில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.

புதன்கிழமை, கோலாலும்பூர்  மஇகா  தலைமையகத்தில்  சரவணன்  பதற்றமிக்க  சூழலில்  செய்தியாளர்  கூட்டம்  நடத்தியபோது அப்படம்  பிடிக்கப்பட்டிருக்கிறது.

அது  பற்றி  மலேசியாகினியிடம்  பேசிய  சரவணன்,  துப்பாக்கி  வைத்திருக்க உரிமம்  பெற்றிருப்பதாகக்  கூறினார்.

“15 ஆண்டுகளாக  லைசென்ஸ்  பெற்று  துப்பாக்கி  வைத்திருக்கிறேன். அதில்  தப்பில்லை. ஒவ்வோராண்டும்  லைசென்சைப்  புதுப்பிக்கிறேன்.

“வழக்கமாக  அது  என்னுடைய   காரில்தான்  இருக்கும்.

“ஆனால், அன்று  அங்கிருந்த  குழப்பத்தில்  கோட்டு  இலேசாக  விலக, துப்பாக்கியின்  பிடி  வெளியில்  தெரிந்திருக்கிறது.

“ஆனால், அதை  யாரை  நோக்கியும்  நீட்டவில்லை”, என்றார்.