ஜோகூர் ஐபிகே திட்டம் கைவிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்க வேண்டும்

ipkரிம  103  மில்லியன்  செலவில்  தொடங்கப்பட்ட  ஜோகூர்  போலீஸ்  தலைமையகத்  திட்டம்  இன்று   “கைவிடப்பட்ட”  நிலையில்  இருப்பது பற்றி  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  விளக்க  வேண்டும்   எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.

பிகேஆர் தலைவர்கள்  புக்கிட்  பத்து  சட்டமன்ற  உறுப்பினர்  ஜிம்மி  புவாவும், National Oversight and Whistleblowers அமைப்பின் இயக்குனர் அக்மால்  நாசிரும் ஜோகூரில் அக்கட்டிடம்  கட்டப்படும்  இடத்துக்குச்  சென்று  வந்ததாகக்  கூறினர்.

“ஜோகூர்  பாருவில்  அந்த  இடத்துக்குச்  சென்று  பார்த்ததில்  2010-இல்  தொடக்கப்பட்ட  கட்டுமான  வேலைகள்  கைவிடப்பட்ட  நிலையில்தான்  உள்ளன”, என்று ஓர்  அறிக்கையில்  கூறினர்.

ஜோகூர்  சட்டமன்றத்தில்  அது  பற்றிக்  கேட்டபோது  2013-இல்  கட்டி  முடிக்கப்படும்  என்று  கூறப்பட்டது.

அக்கட்டிடம் கட்டி  முடிக்கப்படுவதற்கு  அமைச்சர்தான்  பொறுப்பு  என்பதால்   அதன்  இன்றையை  நிலை பற்றி  விளக்கமளிக்க  ஜாஹிட்  ஹமிடி  முன்வரவேண்டும்  என்றவர்கள்  கேட்டுக்கொண்டனர்.

“அவர்  அதைச்  செய்யத்  தவறினால்  வேறு  வழியில்லை, மேலும்  பல  விசயங்களை  அம்பலப்படுத்த  வேண்டியிருக்கும்”, என்றவர்கள்  கூறினர்.