அன்வார்: டிஎபியும் பாஸ்சும் சச்சரவை நிறுத்த வேண்டும்

 

Anwar ceasefireதங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்துமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கேட்டுக் கொண்டார்.

ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக பாஸ் கட்சியும் டிஎபியும் வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அன்வார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

“(சண்டையிட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டு) இதனை கூட்ட மேசைக்கு கொண்டு வருமாறு நான் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்”. என்று அவர் இன்று அம்பாங்கில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.