நஜிப்: ‘சொன்னபடி நடந்தேன்’ என்ற சிருல் கூற்று ‘சுத்த மடத்தனம்’

rubbishபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  முன்னாள் போலீஸ்  அதிரடிப்  பிரிவு வீரரான சிருல் அஸ்கார் உமர் உத்தரவுப்படி  நடந்துகொண்டிருப்பதாக கூறியிருப்பதை “சுத்த  மடத்தனம்” என்று  கூறினார்.

இன்று  கோலாலும்பூரில் மசீச  சீனப்புத்தாண்டு  திறந்த  இல்ல  உபசரிப்பில்  கலந்துகொண்ட  பிரதமர்  செய்தியாளர்களிடம்  இவ்வாறு  கூறினார்.

சிருல், மலேசியாகினிக்குத்  தொலைபேசிவழி  வழங்கிய  நேர்காணலில்  தனக்கிடப்பட்ட  உத்தரவுப்படி  நடந்துகொண்டதாகவும்  அல்தான்துன்யாவைக்  கொல்லும்  நோக்கம்   கொண்டவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்  என்றும்  கூறியிருந்தார்.