அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் முகைதின் யாசின்

 

dpmposttoanwarஎதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததாக கூறப்படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார்.

“அந்த பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி நாளிதழ்களில் மட்டுமே படித்தேன்.

“எனினும், பதவிக்கு போராடுவதை விட கையாள்வதற்கு பல முக்கிய பிரச்சனைகள் இருக்கின்றன”, என்று இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முகைதின் கூறினார்.

மக்கள் இது போன்ற பேச்சுகளால் கவரப்படக் கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

“டிஎபியோ வேறு எவரோ அது போன்ற குற்றச்சாட்டுகளை கூற விரும்பினால், செய்யட்டும். அது அவர்களின் உரிமை.

“அவ்வாறான அறிக்கைகளின் சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் வாதங்களையும் சச்சரவுகளையும் தூண்டிவிட முயற்சிக்கின்றனர்”, என்று முகைதின் மேலும் கூறினார்.