“அனாக் மலேசியா எண்டி டெமொக்ரசி” என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பு போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்காரைக் கொல்லபோவதாக மிரட்டியுள்ளது.
யு-டியுப்பில் முகமூடி அணிந்த மூவர் அம்மிரட்டலை விடுத்தனர்.
அதில் பேசிய ஒருவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை வளர்ந்த நாடுகளாக மற்றவர்களால் மதிக்கப்படும் நாடுகளாக இருக்கின்றன என்றால் அதற்கு அந்நாட்டு மக்கள் ஊழல் அரசாங்கங்களை வீழ்த்த ஜனநாயகத்தை நாடாததுதான் காரணம் என்றார்.
“மலேசியர்களால் தேர்தல் ஆணையத் தலைவரை, சட்டத்துறைத் தலைவரை, போலீஸ் தலைவரை ஜனநாயக முறைப்படி மாற்ற முடியுமா?
“இவர்கள்தான் ஜனநாயகத்தை அழிப்பவர்கள்.
“எனவே, ஜனநாயக- எதிர்ப்பு மலேசியர்களான நாங்கள் ஐஜிபி-இன் காருக்குக் குண்டு வைத்து அவரைக் கொல்லப் போகிறோம்”, என்றாரவர்.
இப்படிச் செய்வதால் அரசாங்கத் துறை தலைவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரான குற்றங்கள் இழைப்பதற்கு அஞ்சுவார்கள் என்றவர் சொன்னார்.
உலகமே பயங்கரவாத தாக்குதல் நடத்துபர்களை “தீவிரவாதிகள்” என்று கூறும்போது , நமது அரசாங்கம் மட்டும் அவர்களை “போராளிகள்” என்று பெருமை படுத்தும். முன்னாள் பிரதமர் மாமா மகாதீர் கூட “தீவிரவாதிகளாக மாறுவதற்கு ஏமாற்றம், அவநம்பிக்கை மற்றும் விரக்திதான் காரணம்” என்று வக்கலாத்தும் வாங்கியும், அவர்களுக்கு ஏமாற்றம், அவநம்பிக்கை, விரக்தி ஏற்பட்ட காரணத்தை கண்டறிந்து அவைகள் களைய பட்டால்தான் திருத்த முடியும் என்று அறிவுரையும் கூறி இருக்கிறார். ஆகவே, நீங்களும் உங்கள் கூற்றுப்படி நமது நாட்டு “ஜனநாயகத்தின்” மீது ஏமாற்றம், அவநம்பிக்கை, விரக்தி காரணமாகவே இப்படி மிரட்டல் விடுத்து இருப்பது தவறு என்றும் கூறவும் முடியாத சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது.
மாமா மகாதீர் என்னதான் நடப்பு அரசாங்கத்தை விமர்சனம் செய்தாலும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக “போராளிகளை” – “அராஜகவாதிகள்” என செம்பருத்தி குறிப்பிட்டதை ஏற்று கொள்ள மாட்டார்
அரசியல் மாற்றத்துக்கு நிறைய வழியிருக்கு.
இப்படி பேடிதனமா போகனுமா?
தாங்க முடியலைடா சாமி.