ஐஜிபி-க்கு அராஜகவாதிகள் கொலை மிரட்டல்

threat“அனாக்  மலேசியா  எண்டி டெமொக்ரசி” என்று  தன்னை  அழைத்துக்கொள்ளும் ஒரு  தரப்பு  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்காரைக்  கொல்லபோவதாக  மிரட்டியுள்ளது.

யு-டியுப்பில்  முகமூடி  அணிந்த  மூவர்  அம்மிரட்டலை  விடுத்தனர்.

அதில்  பேசிய  ஒருவர், அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா ஆகியவை  வளர்ந்த  நாடுகளாக  மற்றவர்களால்  மதிக்கப்படும்  நாடுகளாக  இருக்கின்றன  என்றால்  அதற்கு  அந்நாட்டு  மக்கள்  ஊழல்  அரசாங்கங்களை வீழ்த்த  ஜனநாயகத்தை  நாடாததுதான்  காரணம்  என்றார்.

“மலேசியர்களால்  தேர்தல்  ஆணையத்  தலைவரை, சட்டத்துறைத்  தலைவரை,  போலீஸ்  தலைவரை  ஜனநாயக  முறைப்படி  மாற்ற  முடியுமா?

“இவர்கள்தான்  ஜனநாயகத்தை  அழிப்பவர்கள்.

“எனவே, ஜனநாயக- எதிர்ப்பு  மலேசியர்களான  நாங்கள்  ஐஜிபி-இன்  காருக்குக்  குண்டு  வைத்து அவரைக்  கொல்லப்  போகிறோம்”, என்றாரவர்.

இப்படிச்  செய்வதால்  அரசாங்கத்  துறை  தலைவர்கள்  ஜனநாயகத்துக்கு  எதிரான  குற்றங்கள்  இழைப்பதற்கு  அஞ்சுவார்கள்  என்றவர்  சொன்னார்.