மார்ச் 7 ஆர்ப்பாட்டம் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கும்

demoஅன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டதைக்  கண்டிக்க  மார்ச்  7ஆம்  தேதி நடத்தப்படும்  ஆர்ப்பாட்டம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்-கின்  பதவி விலகலுக்கும்  கோரிக்கை  விடுக்கும்.

இதனைத்  தெரிவித்த  ஏற்பாட்டாளர்கள், பிரதமர்  பதவி  விலக  வேண்டும்  என்பதற்கு  அல்டான்துன்யா  ஷரிபு-வின்  கொலை,  முன்னாள்  போலீஸ்  அதிரடிப்  பிரிவு  வீரர்  சிருல்  அஸ்கார்  உமர்  ஆகக் கடைசியாக  வெளியிட்ட  தகவல்கள்  உள்பட  12 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.

#KitaLawan  என்று  தன்னை  அழைத்துக்கொள்ளும்  அக்குழு  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம் விடுவிக்கப்பட  வேண்டும்  எனவும்  விரும்புகிறது.

தங்கள்  கோரிக்கைகள்  நிறைவேறும்வரை  சனிக்கிழமைதோறும்   ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதாக  அவர்கள்  தெரிவித்தனர்.