சிபிடி குற்றச்சாட்டை இரத்துச் செய்யும் என்எப்சி தலைவரின் முயற்சிக்கு மீண்டும் தோல்வி

nfcதேசிய  பீட்லோட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட்  சாலே  இஸ்மாயில் தம்மீது  சுமத்தப்பட்ட  நம்பிக்கை  மோசடிக்  குற்றச்சாட்டைத்  தள்ளுபடி  செய்யக் கோரி  தாக்கல்  செய்த  மனுவைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது.

இது  அவரது  இரண்டாவது  முயற்சியாகும்.

என்எப்சி  திட்டத்துக்கு  அரசாங்கம்  ஒதுக்கிய  பணத்தைத்  தவறாக  பயன்படுத்தினார்  என்பது  அவர்மீதான  குற்றச்சாட்டு.
குற்றச்சாட்டைக்  கைவிட  வேண்டுமென   கடந்த  ஆண்டில் கேஎல்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  சாலே  செய்து கொண்ட  மனுவும்  இதேபோல்தான்  நிராகரிக்கப்பட்டது.

ஆனாலும், சாலேக்கு  இன்னும்  ஒரு  வாய்ப்பு  உள்ளது. அவர் மேல்முறையீட்டு  நீதிமன்றத்தில்  முறையிடலாம்.