வேள்பாரி: ‘மஇகா-வை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் பழனிவேல்’

velpariமஇகா  தலைவர்  ஜி.ப்ழனிவேல்,  பதவிக்காக  கட்சியையே உடைக்க  நினைக்கும்  ஒரு  சுயநலமி  என  எஸ்.வேள்பாரி  சாடியுள்ளார்.

புதிய தேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற சங்கப்  பதிவக (ஆர்ஓஎஸ்) உத்தரவுக்கு  எதிராக பழனிவேல்  முறையீடு  செய்ய  முடிவெடுத்ததற்கு  அவரது  பதவி  ஆசையே காரணம்  என  கெப்போங்  மஇகா  தொகுதித்  தலைவரான  வேள்பாரி  கூறினார்.

பழனிவேலின் ஆதரவாளர்கள்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியின்  அறிவுரையைத் “தலையீடு”  என்று  கண்டனம்  செய்கிறார்கள். ஆனால்,  பிஎன்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  அறிவுரை  கூறியபோது மட்டும் வாயை  மூடிக்  கொண்டிருந்தார்கள்  என  வேள்பாரி  கூறினார்.

“ஏன் அப்போது தலையீடு  என்று  கூறவில்லை. உங்களுக்குச்  சாதமாக  இருந்தால்  ஏற்றுக்கொள்வீர்கள், வேறு மாதிரியாக  இருந்தால்  தலைவீடு  என்று  கனடனம் தெரிவிப்பீர்கள்”, என்றவர்  காட்டமாகக்  கூறினார்.

ஆர்ஓஎஸ்  உத்தரவுப்படி  நடந்துகொள்ளுமாறு   அஹ்மட்  ஜாஹிட்  பழனிவேலுக்கு  அறிவுரை  கூறியிருந்ததை பழனிவேலின்  ஆதரவாளர்கள்  முதலில்  வரவேற்றாலும்  பிறகு உல்துறை  அமைச்சர்  உள்விவகாரங்க்ளில்  தலையிடுவதாகச் சாடினர்.