இந்திய மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

navy_fisheman_001சட்ட விரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார்.

மீனவர்களுடன் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்ய உள்ள நிலையில், இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

பெரும்பாலும் இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: