பிரதமர் ஆதரவுக் கூட்டத்துக்கும் அம்னோ உள்பூசலுக்கும் தொடர்பில்லை

meetingஅம்னோ  தொகுதித்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச் சந்தித்து  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்வார்கள்.  ஆனால், அச்சந்திப்புக்  கூட்டத்துக்கும்  அம்னோவில்  உள்பூசல்  என்று கூறப்படுவதற்கும்  தொடர்பில்லை.

“அம்னோவில்  பிளவு  எதுவும்  இல்லை”, என  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  கூறினார்.

அம்னோவில்  நஜிப்புக்குச்  சில  தரப்பினர்,  குறிப்பாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்டுக்கு  அணுக்கமானவர்கள்  அழுத்தம்  கொடுத்து  வருவதாக  வதந்திகள்  உலவுகின்றன.

இச்சந்திப்புக்  கூட்டம்  மார்ச் 8-இல்,  நடைபெற திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவரை, அம்னோவின்  191  தொகுதிகளில்  170  அதில் கலந்துகொள்வதை  உறுதிப்படுத்தியுள்ளன.

மார்ச் 7-இல் எதிரணியினர் பிரதமரைப் பதவி  விலகக்  கோரி மாபெரும்  பேரணி  நடத்தத்  திட்டமிட்டுள்ளனர்.