ஆர்ஓஎஸ் மீதான கேலிச்சித்திரத்துக்காக ஸுனாரைக் கைது செய்ய போலீஸ் முயன்றது

bookகேலிச்சித்திர  ஓவியரான  ஸூனார்  மீண்டும்  போலீசில்  சிக்கிக்கொள்ளப்  பார்த்தார்.  ‘Ros in Kangkung Land’  என்ற  கேலிச்சித்திரத்துக்காக  போலீசார்  அவரைக்  கைது  செய்ய  முயன்றனர்.
இன்று  காலை,  பிரிக்பீல்ட்சில்  ஸுனாரின்  நூல்  வெளியீடு  நடைபெற்றுக்  கொண்டிருந்தபோது சுமார் 20 போலீசார்  அங்கு  வந்தனர்.

நூல் வெளியீட்டுக்கு  அனுமதி  பெறவில்லை  என்றும்  அதற்காக  அவரைக்  கைது  செய்யப்போவதாகவும்  அவரிடம் தெரிவித்தனர்.

“ஆனால், அவர்களிடம் அந்நிகழ்வு  தனியார்  இடத்தில்  நடப்பதாகவும்  அதற்கு  அனுமதி தேவையில்லை  என்றும்  தெரிவித்தேன்”, என்று ஸூனார்  கூறினார்.