600 காவற்துறை அதிகாரிகளின் கொலைக்கும் தமக்கும் தொடர்பில்லை – கருணா

karuna_batticalo1990ம் ஆண்டு ஜுன் மாதம் 600 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டப்பட்டமைக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறும் போது தாம் வடக்கில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த கொலைகள் மூலம் விடுதலைப் புலிகளே யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளதாகவும், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் எந்த யுத்தக் குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் இந்த செவ்வியில் கூறியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராளிகள் என்று கூற முடியாது எனவும், அவர்கள் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் கருணா குற்றம் சுமத்தியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: