பழனிவேலும் மேலும் மூவரும் நீதிமன்ற மேலாய்வுக்கு மனுச் செய்தனர்

manuம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், உதவித்  தலைவர் எஸ்.சோதிநாதன்  ஆகியோரும்  இன்னும்  இருவரும்  சங்கங்களின் பதிவகம் (ஆர்ஒஎஸ்)  கட்சிக்கு  எதிராக  எடுத்துள்ள முடிவை  மேலாய்வு  செய்ய  வேண்டும்  என  நீதிமன்றத்தில்  மனுச்  செய்துள்ளனர்.

அம்மனுவில்  உள்துறை  அமைச்சர்  எதிர்வாதியாகக்  குறிப்பிடப்பட்டுள்ளார். உள்துறை  அமைச்சின்கீழ்தான் ஆர்ஓஎஸ்  செயல்படுகிறது.

அவர்களின்  மனு  அடுத்த  திங்கள்கிழமை  உயர்  நீதிமன்றத்தில்  நீதிபதி   அஸ்மாபி  முகம்மட்  முன்னிலையில்  விசாரணைக்கு  வரும்  எனத்  தெரிகிறது.