அன்வார் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது

rejectஎதிரணித்  தலைவர் அனவார்  இப்ராகிம்,  அடுத்த  வாரம்  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  அனுமதி  கேட்டு செய்துகொண்ட  விண்ணப்பத்தைச்  சிறைத்துறை  நிராகரித்தது.

அவரது  வேண்டுகோள்  நிராகரிக்கப்பட்டதைத்  தெரிவிக்கும்  கடிதம்  அன்வாரின்  வழக்குரைஞர்களுக்கும்  குடும்ப  உறுப்பினர்களுக்கும்  இன்று  பிற்பகல்  கிடைக்கப்  பெற்றதாக  பிகேஆர்  அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.

பிஎன்  ஆதரவாளர்  மன்ற  இணையத்  தளத்தில்  வெளியிடப்பட்டிருந்த  செய்தி ஒன்று,  சிறை விதிகளின்படி அன்வாரின்  விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டதாகக்  கூறியது. நிராகரிப்புக்  கடிதத்தின்  பிரதி  ஒன்று மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவுக்கும்  அனுப்பப்பட்டிருப்பதாக  அது  குறிப்பிட்டது.