குவான் எங் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்

guanநாளை கோலாலும்பூரில், கித்தா  லவான்  கூட்டமைப்பு  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  விடுதலைக்காக  நடத்தும்  பேரணியில்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கலந்துகொள்ள  மாட்டார்.

சோகோ  விற்பனை  மையத்துக்கு  வெளியில்  மாலை  நான்கு  மணி  தொடங்கி  நள்ளிரவுவரை  நடைபெறவுள்ள  அப்பேரணி  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கையையும்  முன்வைக்கும்.

“மாநில  அளவில்   நிறைவேற்ற  வேண்டிய  பொறுப்புகள்  இருக்கின்றன”, என்று  லிம்  கூறினார்.

வார  இறுதியில்  மூத்த  குடிமக்களுக்கு  ரிம100  ரிங்கிட் வழங்கும்  நிகழ்வுகள்  இருப்பதாகவும்  அவற்றில் சட்டமன்ற  உறுப்பினர்கள்  கலந்துகொண்டு  நிதியை  வழங்குவார்கள்  என்றும்  அவர்  சொன்னார்.

“அது  மக்களுக்கான ஒரு நிகழ்வு. எனவே, அதற்கு  முன்னுரிமை  கொடுப்பது  அவசியமாகிறது”, என்று  லிம்  குறிப்பிட்டார்.