திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவியின் காலில் விழுந்து வணங்கும் அமைச்சர்!


டெல்லியில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் மகளிர்  மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளவர் சந்தீப் குமார்.

இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ரீத்து வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவி ரீத்து வர்மாவின் காலை தொண்டு வணங்குவதை சந்தீப் குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் பெண்களை மதிப்பவன். பெண்கள் தெய்வமாக வழிபட வேண்டியவர்கள் எனும் கூற்றை நம்புகிறேன். எனவே தினமும் பணிக்கு செல்லும்போது, என் மனைவியின் காலை தொண்டு வணங்கிச் செல்கிறேன். என்னை அவர் வாழ்த்தி அனுப்புவார். மற்றவர்களின் கேலி கிண்டலுக்காக நான் வருத்தப்பட்டது கிடையாது. என் மனைவியும் அதனை கண்டுகொள்வதில்லை என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: