கெராக்கான் தொடர்ந்துள்ள ஹூடுட் வழக்கில் கோபால் ஸ்ரீ ராம்

 

Gerakansriram1-300x180கிளந்தான் மாநில அரசு இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி கெராக்கான் தொடர்ந்துள்ள வழக்கில் பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனை கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும் வழக்குரைஞருமான எண்டி யோங் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

“ஸ்ரீ ராம் கெராக்கானின் சட்ட ஆலோசகர். அவர் என்னுடன் இணைந்து இந்த விவகாரத்தில் செயல்படுகிறார்”, என்று யோங் கூறினார்.

கட்சியின் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை கிளந்தான் அரசிடம் சார்வு செய்வதற்காக யோங் தற்போது கோட்டாபாருவில் இருக்கிறார்.