கிளந்தான் மாநில அரசு இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி கெராக்கான் தொடர்ந்துள்ள வழக்கில் பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும் வழக்குரைஞருமான எண்டி யோங் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
“ஸ்ரீ ராம் கெராக்கானின் சட்ட ஆலோசகர். அவர் என்னுடன் இணைந்து இந்த விவகாரத்தில் செயல்படுகிறார்”, என்று யோங் கூறினார்.
கட்சியின் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை கிளந்தான் அரசிடம் சார்வு செய்வதற்காக யோங் தற்போது கோட்டாபாருவில் இருக்கிறார்.
இன்றைய அரசியல் சூழலில் முடிவு அரசியல் வழிதான் காணப் பட முடியுமே ஒழிய நீதிமன்றத்தின் வழியாக அல்ல. நீங்கள் எவ்வளவுதான் சட்டங்களை நீதிபதிகள் முன் எடுத்துப் போட்டாலும் அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?. கெரக்கான் கட்சி தலைவர்களுக்கு அரசியல் தீர்வு காணத் தெரியவில்லை என்றால் அந்த சட்டத்திற்கு வக்காலத்து வாங்கி கிளந்தான் சட்டமன்றத்தில் வாக்களித்த தே.மு. கட்சியில் இருந்து தாரளமாக விலகலாமே!. அதை விடுத்து ஏன் இந்த நீதிமன்ற நாடகம் எல்லாம். நாங்கள் நீதிமன்றத்தில் பார்க்காத நாடகங்களா?.
பணம் வந்தால் சரி…..ஸ்ரீ ராம் கோபால் ….இப்பவே இப்படி பணத்துக்காக குள்ளநரி வேஷம் போடுறியே ….நீ பதவியில் இருக்கும்போது எவளவோ சுருட்டி இருப்பே…..ஆனால் உங்களை போல ஆளுங்க எல்லாம் இப்படி தான் இருப்பானுங்க போல …..