1எம்டிபி கடன்கள்மீதான கேள்விக்கு பிரதமரின் ஒரு-வரி பதில்

rafபிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  உள்ளூர்  வங்கிகளிடம்  வாங்கியுள்ள  க டன்கள்  பற்றி  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட  கேள்விக்கு விரிவாக பதிலளிக்க  மறுத்து  விட்டார்.

ரபிஸி  ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான  1எம்டிபி-இன்  கடன்கள்  பற்றியும்  அதன்  கடன்  நிலவரம்மீது   பேங்க்  நெகராவின்  கணக்குத் தணிக்கை  பற்றியும்  விளக்கமான  பதில் தேவை  என்று  கேட்டிருந்தார்.

அதற்கு  நஜிப்பின்  எழுத்துப்பூர்வமான  பதில் ஒரு வரியில்  அடங்கியிருந்தது: “2015 ஜனவரிவரை  உள்ளூர் வங்கிகளிடம்  1எம்டிபி  பட்டிருந்த கடன்  ரிம5.037 பில்லியன்  ரிங்கிட்”.

இந்த  ஒரு-வரி  பதில், எம்பேங்க்  1எம்டிபி-க்குக்  கொடுத்த  கடனில்  முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக  ஏற்கனவே  தாம்  சுமத்திய  குற்றச்சாட்டுக்கு  வலுச்  சேர்ப்பதாக ரபிஸி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“எம்பேங்க் கொடுத்த  கடனில்  முறைகேடுகள்  இல்லை  என  பேங்க்  நெகாரா  கூறியிருந்தால்  அமைச்சர்  அதைத் தெரிவிக்கத்  தயங்கி  இருக்க  மாட்டாரே”, என்றாரவர்.