மேக்கேதாட்டுவில் அணை கட்ட தடை கோரி தமிழகம் வழக்கு

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

மேக்கேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

தற்போது அணை கட்டும் திட்டத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

-http://www.dinamani.com

TAGS: