சட்ட ரீதியாக தமிழக அரசு தடை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி அணை கட்டுவது உறுதி: கர்நாடக அமைச்சர்

kaveri-anaiகாவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் திட்டமிட்டபடி அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக சட்ட மேலவையில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு அரசியல், சட்ட ரீதியாக தமிழக அரசு தடைகளை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க கர்நாடக அரசு தயாராக உள்ளது.

மேகதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருவதோடு, சட்ட நிபுணர்களோடு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: