நண்பேன்டா படத்துக்கு வரி விலக்கு தர மறுப்பு- வழக்கு தொடர்கிறார் உதயநிதி

Udhayanidhi-Stalinசென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘நண்பேன்டா’. நயன்தாரா, சந்தானம், ஷெரீன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி உதயநிதி நிருபர்களிடம் கூறியதாவது:நான் நடிக்கும் 3வது படம் இது.  இதை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் 2வது பாகம் என்றுகூட சொல்லலாம். அவ்வளவு ஜாலியாக இருக்கும். ரொமான்டிக் காமெடி த்ரில்லர் பட வரிசையில் முக்கியத்துவம் பெறும். நயன்தாராவின் ரசிகன் நான்.

எனது தயாரிப்பில் ‘ஆதவன்’ படத்தில் அவர் நடித்திருந்தார். என் முதல் படத்தில் அவரை நடிக்கக் கேட்டேன். பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் ஜோடி சேர்ந்தார். இப்போது ‘நண்பேன்டா’ மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

படம் முழுவதும் அவரும், நானும் மோதிக்கொண்டே இருப்போம். இந்தப் படத்தில் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். 2-4-2015 படம் ரிலீசாகிறது. சென்சார் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது.

ஆனால், கேளிக்கை வரி விலக்கு குழுவினர், வரி விலக்கு தர மறுத்து விட்டனர். இதை எதிர்த்து, திங்கட்கிழமை வழக்கு தொடர உள்ளேன்.அடுத்து ‘கெத்து’, ‘இதயம் முரளி’ படங்களில் நடிக்கிறேன். அரசியல் மற்றும் போலீஸ் கதைகளில் நடிக்க விருப்பம் இல்லை. ‘ஆண்பாவம்’ ரீமேக்கில் நடிக்க அதன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். படத்தின் இயக்குனர் ஏ.ஜெகதீஷ் உடனிருந்தார்.

-http://cinema.dinakaran.com