ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் ‘திரும்பவும்’ சுங்கத் துறை சென்றார்கள்

flowerஒரு  வாரத்துக்குமுன்  பொருள், சேவை  வரிமீது 106  கேள்விகளுடன்  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத்  துறையை  முற்றுகையிட்டபோது  கைதான ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்களில்  சுமார் பன்னிரண்டு  பேர்  இன்று  திரும்பவும்  அங்கு  சென்றார்கள்.

ஆனால், ஒரு  மாற்றம். இப்போது அவர்கள்  ஜிஎஸ்டி-க்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  அங்கு செல்லவில்லை. தங்களின்  கேள்விகளுக்குப்  பதில்  அளித்ததற்கு  நன்றி  தெரிவிக்கவே  சென்றார்கள். ஆனாலும், 106  கேள்விகளில் 17-க்குப்  பதில்   அளிக்கப்படவில்லை  என்றும்  அவர்கள்  தெரிவித்தனர்.

அமைதி  நோக்கில்  வந்ததன்  அடையாளமாக  அவர்கள்  கைகளில்  மலர்க்  கொத்துகளை  ஏந்தி  இருந்தனர்.

போலீஸ்  படை  ஒன்று  அருகில்  நின்று  அவர்களின்  நடவடிக்கையைக்  கண்காணித்துக்  கொண்டிருந்தது.