‘அன்வாரின் தொகுதி காலியாக உள்ளது’

speakerஅன்வார்  இப்ராகிம்  இனியும்  பெர்மாத்தாங்  பாவ்  தொகுதி  எம்பி  அல்லர்  என்பதை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  உறுதிப்படுத்தினார்.

மார்ச்  16-இலேயே  மன்னிப்பு  வாரியம்  அன்வாரின்  மனுவை  நிராகரித்திருக்கிறது  என்றும்  ஆனால்  அதன்  முடிவு  இன்றுதான்  தமக்குத்  தெரிய  வந்தது  என்றும்  பண்டிகார்  கூறினார்.

ஆக, பெர்மாத்தாங்  பாவ்  தொகுதியில்  60  நாள்களுக்குள் தேர்தல்  ஆணையம்  இடைத்  தேர்தல்  நடத்தியாக  வேண்டும்.