தமிழா! ஏன் தொலைத்தாய்?

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

+++++அன்று +++++
ஆரியனும், பிராமணனும் சேர்ந்தே வெட்டிய குழியில்——
உன் இறை நெறியை தொலைத்து விட்டு, ——–
மூட பழக்கத்தை வளர்த்துக்கொண்டாய்.———

+++++நேற்று++++++
கலைக்கூத்தாடி வடுகன்கள் காட்டிய குழியில்———
உன் கலை, கலாசாரத்தை தொலைத்து விட்டு, ——–
வன்முறையும், பிரிவினவாதத்தையும் வளர்த்துக்கொண்டாய்.———

+++++இன்று+++++
மேலை நாட்டு நாகரிக முன்னேற்றம் என்ற மாயக் குழியில்———
உன் உணவு பழக்கத்தையும், தாய் மொழியையும் தொலைத்து விட்டு,———-
உன் உடலுக்கு நோயையும்,
உன் தலைமுறைக்கும் டமிங்கிலிசையும் வளர்த்துக் கொண்டாய்.———-

+++++நாளை+++++
இனி உன்னிடம் மிஞ்சி நிற்பது பண்பாடு மட்டுமே.———-
அதையும் யாரிடம் தொலைத்து விட்டு, ——–
அம்மனமாய், பரதேசியாய் திரிய போகிறாய்?———-
சொல் தமிழா! சொல், ———–
ஆறறிவு கொண்ட, சிந்திக்கும் மனம் கொண்ட
தமிழா சொல்?

தமிழை கிண்டினால் மணக்கும்,———
தமிழை சீண்டினால் வெடிக்கும்——–
தமிழுடன் வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.———

ஆனால் சிலருக்கு————-
தமிழில் பேசினால் வாய் கசக்கும்.———-
டமிலில் பேசினால் வாய் இனிக்கும்———-
தமிழே எல்லா மொழிக்கும் தாய் மொழி——–
டமிலா! எதுதான் உன் தாய் மொழி?

 -பொன்.ரங்கன்

 

TAGS: