ஜிஎஸ்டி: 800 புகார்கள்தானா? ஆச்சரியப்படுகிறார் அமைச்சர்

surpநேற்று  அமலாக்கத்துக்கு  வந்த  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)  தொடர்பில் 800  புகார்களே வந்துள்ளதைக்  கண்டு  வியப்பில்  ஆழ்ந்திருக்கிறார்  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட் மஸ்லான்.

இது, அப்புதிய  வரிக்கு ஒரு  நல்ல  தொடக்கம்  என்பதைக் காண்பிப்பதாக  அவர்  கூறினார்.

“30 மில்லியன்  மலேசியர்கள் இருப்பதால் 8,000 அல்லது 18,000  அல்லது 80,000  புகார்களை  எதிர்பார்த்தோம்.

“815  புகார்களே  வந்திருப்பதைக்  கண்டு  வியப்படைகிறோம்”, என்று  மக்களவை  கேள்வி  நேரத்தின்போது  மஸ்லான்  கூறினார்.