சாமிவேலு: பழனிவேல் மஇகா-வைக் கொன்று விட்டார்

samyமஇகா-வின்  நடப்புத்  தலைவர்  ஜி.பழனிவேல்  அக்கட்சியைக்  கொன்று  அதன்  வீழ்ச்சிக்கும்  காரணமாக  அமைந்து  விட்டார்  என  மஇகாவின்  நீண்டகாலத்  தலைவர்  ச.சாமிவேலு  குற்றம்  சாட்டியுள்ளார்.

“அவரை(ஜி.பழனிவேல்)ப் பாராட்ட  வேண்டும். இதுவரை  எவராலும் மஇகாவை  அழிக்க  முடியவில்லை. அவர்  பதவிக்கு  வந்ததும்  மஇகாவை  அழித்து  விட்டார்”, என  சாமிவேலு  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

இன்று  கோலாலும்பூரில்  இந்திய  சமூகம்  மீதான  ஒரு  கருத்தரங்கில்  கலந்துகொண்ட  சாமிவேலு  மலேசியாகினியிடம்  பேசினார்.

“அவர்  இந்திய  சமூகத்துக்காக  பாடுபட்ட  ஒரு  கட்சியை  அழித்து  விட்டார், இந்தியர்களைப்  பிரதிநிதித்த  ஒரு  கட்சியை  அழிந்து  விட்டார், இந்தியர்களுக்காக  நிறைய  செய்த  ஒரு  கட்சியை  அழித்து  விட்டார்”.

இப்போதெல்லாம்  இந்திய  சமூகம்  மஇகாவைப்  பொருட்படுத்துவதில்லை  என சாமிவேலு  கூறினார்.

“மஇகா  அதன்  பலத்தை  இழந்து விட்டது….  இந்திய சமூகம்  மொத்தமும்  மஇகாவை  எதிர்பார்த்திருந்த  காலம்  போய்விட்டது”, என்றாரவர்..