முன்னாள் மந்திரி புசார் ரொம்பினில் பிஎன் வேட்பாளர்

candபகாங்கின்  முன்னாள்  மந்திரி  புசார்  ஹசான்  அரிப்பின்  ரொம்பினில்  பிஎன்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  அவரது  நியமனத்தை  அறிவித்தார்.

ஹசான்  ரொம்பின்  அம்னோ  தொகுதி  இடைக்காலத்  தலைவருமாவார்.

ரொம்பின்  இடைத்  தேர்தல்  மே 5-இல்  நடைபெறும். அத்தொகுதி  எம்பி ஜமாலுடின்  ஜர்ஜிஸ்  ஏப்ரல் 4-இல்  ஹெலிகாப்டர்  விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை  அடுத்து  இவ்விடைத்  தேர்தல்  நடைபெறுகிறது.