பகாங்கின் முன்னாள் மந்திரி புசார் ஹசான் அரிப்பின் ரொம்பினில் பிஎன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் அவரது நியமனத்தை அறிவித்தார்.
ஹசான் ரொம்பின் அம்னோ தொகுதி இடைக்காலத் தலைவருமாவார்.
ரொம்பின் இடைத் தேர்தல் மே 5-இல் நடைபெறும். அத்தொகுதி எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ் ஏப்ரல் 4-இல் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து இவ்விடைத் தேர்தல் நடைபெறுகிறது.
ரோம்பினில் பாரிசான் ஜெயிப்பது உறுதி என்றாலும். அதன் பெரும்பான்மை குறைக்கப்படவேண்டும். இவ்வேளையில் பாஸ் கட்சியை ஹுடுட்டுடன் ஒப்பிடாமல் பக்காத்தானில் உள்ள ஒரு கூட்டணி என்பதை எண்ணிக்கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதைய ஜனநாயகமற்ற சட்டங்களும், GST போன்றவையும் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதை நினைவூட்டுகிறேன். அத்தொகுதியில் 87% மலாய், 3% சீனர், 2% இந்தியர்[600 பேர்], வாக்காளர்கள் உள்ளனர்.