மேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்: சித்தராமையா

kaveriமேகதாதுவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவே மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணி தொடங்கப்படும்.

இதுதொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய நீர் வளத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கோர உள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேகதாது விவகாரம் தொடர்பாக தமது தலைமையில் கர்நாடக அனைத்துக்கட்சி குழு வரும் 22-ஆம் தேதி பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

-http://www.nakkheeran.in
TAGS: