பிஎன் பெர்மாத்தாங் பாவ்வில் வெற்றி பெறுவது கடினம் – மகாதிர்

 

Mahathirpermatangபெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவது கடினம் ஏனென்றால் அங்கு அன்வார் இப்ராகிம் வெறியர்கள் இருக்கிறார்கள் என்று மகாதிர் முகமட் கூறுகிறார்.

“அன்வார் இருந்த இடத்தில் அது மிகவும் கடினமானது, அங்கு வெறியர்கள் இருக்கிறார்கள்”, என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“(இந்த) மக்கள் உண்மையான நிலை, மெய்மை பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள் என்று அவர் கூறினார்.

அன்வார் இப்ராகிமுக்கு குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்மாத்தாங் பாவ நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கிறது.