சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைப்பீர்: மஇகா இளைஞர்கள்

sivaதாமான்  மூடா  தேவாலயம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தியதால்  அகற்றிய  சிலுவையை  எடுத்த  இடத்திலேயே  திரும்பவும் வைக்க  வேண்டும்  என  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜ்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“தேவாலயம்  50 ஆர்ப்பாட்டக்காரர்கள்  கொடுத்த  நெருக்குதலுக்கு  அஞ்சி, அவர்களின் திருப்திக்காக  சிலுவை அகற்றியிருக்க  வேண்டியதில்லை.

“அது  அவர்கள்  செய்த  முதல் தவறு. இனி, சிலுவையை  எடுத்த  இடத்திலேயே  திரும்ப  வைப்பது  சர்ச்சைக்குரிய  விவகாரமாகவும்  கிறிஸ்துவர்களுக்கும்  முஸ்லிம்களுக்குமிடையில் கருத்துவேறுபாடுகளுக்கு  இடமளிக்கும்  விவகாரமாகவும்  மாறலாம்.

“அவர்கள் இப்போதே  தங்கள்  சமயத்தின்மீதுள்ள  நம்பிக்கையின்  அடையாளமாக  சிலுவையை  அதன்  இடத்தில்  திரும்பவும் வைக்க  வேண்டும்”, என்றவர் கூறினார்.

இதற்கு  தேவாலயம்  போலீஸ்  மற்றும்  ஊராட்சி  மன்றத்தின்  உதவியையும்  நாடலாம்  என  சிவராஜ்  குறிப்பிட்டார்.