ஆயர் போலீஸ் பாதுகாப்பை நாடுகிறார்

pastorகடந்த  ஞாயிற்றுக்கிழமை  எந்த  தாமான்  மேடான்  தேவாலயத்தில்  சிலுவையை  அகற்றக்  கோரி  ஆர்ப்பாட்டம்  நடந்ததோ  அந்தத்  தேவாலயம்  போலீஸ்  பாதுகாப்பை  நாடுகிறது.

தேவாலயம்  செய்த  போலீஸ்  புகாரில்  அதன்  ஆயர்,  தம்  பாதுகாப்பு  குறித்தும்  தேவாலயம்  வரும்  கூட்டத்தினரின்  பாதுகாப்பு  குறித்தும்  அஞ்சுவதாகக்  கூறினார். குறிப்பாக, ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவரைச்  சந்தித்தபோது  அவர்  ஆத்திரத்துடன்  நடந்து  கொண்டது  ஆயருக்கு அச்சத்தைக்  கொடுத்துள்ளது.

“போலீஸ்  நடமாட்டம்  தேவை  எனக்  கேட்டுக்கொள்கிறேன்….எனக்கோ  என்  உறுப்பினர்களுக்கோ  விரும்பத்தகாத  சம்பவங்கள்  நடந்து  விடலாம்  என்ற  அச்சம்தான்  காரணம்”, என  ஆயர்  அப்புகாரில்  கூறியிருந்தார்.