‘தேவாலய ஆர்ப்பாட்டக்காரர்களைத் தண்டிக்காதீர், நல்லறிவு புகட்டுவீர்’

sscதாமான்  மேடான்  தேவாலயத்தில்  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களைத்  தண்டிக்க  வேண்டாம்  என்றும்  அரசாங்கம்  சமயங்களுக்கிடையில்  நல்ல  புரிந்துணர்வை  ஏற்படுத்தும்  பணிகளை  மேற்கொள்ள  வேண்டும் என்றும் சாபா  தேவாலயங்கள்  மன்றம் (எஸ்சிசி)  கேட்டுக்கொண்டிருக்கிறது.

“அது  தவிர (தண்டிப்பதைவிட) மலேசியரிடையே நல்ல  புரிந்துணர்வை ஏற்படுத்தும் பொறுப்பான, தார்மீக  கடமையும்  அரசாங்கத்துக்கு  உண்டு.

“இதுபோன்ற  சம்பவங்கள்  அறியாமையால் விளைபவை, அறியாமையே  வெறுப்பை  வளர்க்கிறது”, என  எஸ்சிசி  தலைவர்  ஜெர்ரி டஸ்டிங்  கூறினார்.