நஜிப், ரோஸ்மாவுக்கு எதிரான செந்தமிழ்ச் செல்வியின் மனு தள்ளுபடி

suitகாலஞ்சென்ற  தனியார்  துப்பறிவாளர்  பி.பாலசுப்ரமணியத்தின்  மனைவி  ஏ.செந்தமிழ்ச்செல்வி,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  அவரின்  மனைவி  ரோஸ்மா  மன்சூருக்கும்  எதிராக பதிவுசெய்திருந்த  ரிம1.9 மில்லியன் வழக்கை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது.

செந்தமிழ்ச்செல்வியின்  வழக்குரைஞர்  அமெரிக்  சிது  பதிவுசெய்த  முறையீட்டு  மனு  குறைபாடுடையது  என  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  ஏக  மனதாய்  தீர்ப்பளித்தது.

நஜிப்பின் தம்பிமார்  ஜொகாரி,  நஸிம்  ஆகிய  இருவரும்  மூத்த  வழக்குரைஞர்  சிசில்  எப்ராஹம், அவரின்  மகன்  சுனில்  எப்ராஹம், வழக்குரைஞர் எம். அருனாம்பலம், சத்திய  பிரமாண  ஆணையர்  சைனல்  அபிடின்  முஹாயாட்  ஆகியோரும்  அவர்களுக்கு  எதிரான  முறையீட்டை  நிராகரிக்க  வேண்டும்  என்று  செய்து கொண்டிருந்த  மனுவையும் நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டது.

அவர்களுக்குச்  செலவுத்  தொகையாக  ஆளுக்கு  ரிம5,000  கொடுக்கும்படியும்  செந்தமிழ்ச்செல்விக்கு  நீதிபதிகள்  முகம்மட் சவாவி  முகம்மட்  சாலே உத்தரவிட்டார்.

ஆனால், கம்பள வியாபாரியான  தீபக்  ஜெய்கிஷனுக்கு  எதிராக  செந்தமிழ்ச்செல்வி  தொடுத்துள்ள  வழக்கை,  வழக்கைத் தள்ளுபடி  செய்ய  அந்த  வியாபாரி மனுச்  செய்யாத  காரணத்தால்,  நீதிமன்றம்  விசாரணைக்கு  ஏற்றுக்கொண்டது.