ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மலேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

1 adnanபெட்டாலிங்  ஜெயாவில்  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  செய்தவர்கள், சாபா, சரவாக்கைப்  பின்பற்றி  பல்வேறு  சமயத்தவரிடையே  உறவுகளை  வலுப்படுத்த  வேண்டும்  என  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  மன்சூர்  கூறினார்.

“சாபா, சரவாக்கில் நடப்பதை  அவர்கள் பின்பற்ற  வேண்டும். தேவாலயமும்  பள்ளிவாசலும்  பக்கத்தில் பக்கத்தில்  உள்ளன.

“வெள்ளிக்கிழமை  தொழுகையின்போது  தேவாலயம்  முஸ்லிம்கள்  கார்களை  நிறுத்துவதற்காக அதன்  கார்  நிறுத்துமிடத்தைத்  திறந்து விடுகிறது.

“ஞாயிற்றுக்கிழமை  பள்ளிவாசல்  அதன்  கார்  நிறுத்துமிடத்தைத்  தேவாலயம்  செல்லும்  மக்களுக்காக  திறந்து  விடும்.

“இதுதான்  நமக்கு  வேண்டும். அவர்கள் (ஆர்ப்பாட்டக்காரர்கள்) செய்வது நமக்கு  வேண்டாம்”. மலேசியாகினி  தொடர்புகொண்டபோது  தெங்கு  அட்னான்  இவ்வாறு  கூறினார்